Breaking

Search This Blog

07/10/2020

Message for GCE A/L 2020 Students (University Entrance Criteria)
October 07, 2020

Message for GCE A/L 2020 Students (University Entrance Criteria)

 

Message For

GCE A/L 2020 Students

(University Entrance Procedure)

අ.පො.ස. 2020 උසස් පෙළ සිසුන් සඳහා

(විශ්ව විද්‍යාල ප්‍රවේශ ක්‍රියා පටිපාටිය)

க.பொ.த உயர்தர 2020 மாணவர்களுக்கான செய்தி

(பல்கலைக்கழக நுழைவு நடைமுறை)






Guru Gedara Time Table
October 07, 2020

Guru Gedara Time Table

      


Guru Gedara TV Time Table
05 - 11 Oct 2020
ගුරු ගෙදර අධ්‍යාපන නාලිකා කාලසටහන
குருகுலம் கல்வி அலைவரிசை : நேர அட்டவணை

Click Below for Nenasa Educational Mobile App

Click Below for Their Official You Tube Channel



06/10/2020

Cabinet Decisions : 05 Oct 2020
October 06, 2020

Cabinet Decisions : 05 Oct 2020

 

Cabinet Decisions 05 Oct 2020 
කැබිනට් තීරණ 
அமைச்சரவை முடிவுகள்
தமிழ் அறிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது.

Source : News.lk

 

2020.10.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

01. 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் 'விசேட வைப்புக் கணக்கினை' பேணுதல் தொடர்பாக கட்டளையிடல்

நாட்டிற்கு வெளிநாட்டுச் செலாவணி கிடைப்பதை அதிகரிக்கும் நோக்கில், 06 மாத காலத்திற்கு வங்கிகளுக்கு ஊடாக நாட்டிற்கு கிடைக்கும் பணத்தை வைப்புச் செய்வதற்காக 'விசேட வைப்புக் கணக்கு' எனும் பெயரில் சமகால வைப்புக் கணக்கை ஆரம்பிப்பதற்காக 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழ் கட்டளையிடுவதற்கு 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கமைய வழங்கப்பட்ட கட்டளையின் காலவரையறை 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி முடிவடைவதுடன், அதன் கட்டளைக்கமைய இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டுச் செலாவணியை நாட்டில் பேணுவதற்கு ஏற்புடைய வகையில் இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையால் கீழ் காணும் பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

• கால முடிவின் பின்னர் மீள் புதுப்பித்து பேணப்படும் 'விசேட வைப்புக் கணக்கின்' பொதுத் தவணை வைப்புக்கான வட்டி வீதத்தைச் செலுத்துதல்.

•'விசேட வைப்புக் கணக்கு' கால முடிவின் போதான தவணைக்கான வருமானத்தை இலங்கையிலுள்ள வேறொரு கணக்கிற்கு மாற்றுவதற்கான அனுமதியை வழங்கல்.

• இலங்கையர் ஆனாலும், வெளிநாட்டு நாணய வைப்புக் கணக்கு ஆரம்பிப்பதற்கு தகுதியில்லாதவர்களின் (அரச சார்பற்ற நிறுவனங்கள், பிணைக் கம்பனிகள் போன்ற) விசேட வைப்புக் கணக்கின் தவணைக்கான வருமானம், தொடர்ந்து இலங்கையிலிருந்து வெளிச் செல்லாத வகையில் இலங்கை ரூபாய்க் கணக்கில் வைப்பிலிடல்

அதற்கமைய, விசேட வைப்புக் கணக்குத் தொடர்பாக 2020.04.08 ஆம் திகதி 2170ஃ04 ஆம் இலக்க 2020.07.01 ஆம் திகதி 2182/32 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்ட கட்டளைகளுக்கு மேலதிகமாக வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் 29 ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 7 ஆம் உறுப்புரையின் பிரகாரம் புதிய கட்டளைகளை வெளியிடுவதற்காக குறித்த கட்டளைகளை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சரான மாண்புமிகு பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

02) 1934 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க ஊழியர் இழப்பீட்டு கட்டளைச் சட்டத்தை (139 ஆம் அதிகாரம்) திருத்தம் செய்தல்

நாட்டைக் கட்டியெழுப்பும் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்திற்கமைய 'நாட்டிற்காக வேலை செய்யும் கலாச்சாரம்' எனும் தொனிப்பொருளின் கீழ் 1934 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க ஊழியர் இழப்பீட்டு கட்டளைச் சட்டத்தைத் திருத்தியமைத்து திடீர் விபத்தின் போது ஊழியர்களுக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய திடீர் விபத்துக்களால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு செலுத்தப்படும் இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதற்காக ஊழியர் இழப்பீட்டுக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் திருத்தியமைப்பதற்கு சட்டவாக்கத்தால் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலம் கீழ்வரும் காரணிகளின் அடிப்படையில் மேலும் திருத்தியமைக்கப்பட வேண்டுமென அவதானிக்கப்பட்டுள்ளது.

• ஊழியர் இழப்பீட்டு கட்டளைச் சட்டத்தின் 42 ஆம் உறுப்புரையின் கீழ் ஊழியர் ஒருவருக்கு ஏற்படும் விபத்தால் தொழில் வழங்குனரால் இழப்பீட்டு ஆணையாளருக்கு இழப்பீட்டுக் கூற்று சமர்ப்பிக்கப்படாத சந்தர்ப்பத்தில், தற்போதுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் விதிக்கப்படும் ரூபா 1000 குற்றப்பணத் தொகையை அதிகரித்தல்

• இழப்பீட்டு அளவுகளை எடுத்துக்காட்டும் ஊழியர் இழப்பீட்டுக் கட்டளைச் சட்டத்தின் 04 ஆம் துணை ஆவணத்தை சமகாலத்திற்கு ஏற்ற வகையில் கீழ்வருமாறு திருத்தியமைத்தல்

I. தற்போதுள்ள ரூ. 0 தொடக்கம் ரூ.2500 வரையான இழப்பீடு செலுத்துவதற்காக ஏற்புடையதான குறைந்த மாதச் சம்பளம் ரூ. 0 தொடக்கம் ரூ. 10,000 வரை அதிகரித்தல்.

II. தற்போதுள்ள ரூ. 20,001 இற்கு அதிகமான இழப்பீடு செலுத்துவதற்கு ஏற்புடைய உயர்வான மாதாந்தச் சம்பளம் ரூ. 100,000 வரை அதிகரிப்பதற்குத் திருத்தியமைத்தல்.

III. தற்போது ரூ. 181,665 தொடக்கம் ரூ. 550,000 வரை உயிரிழப்பின் போது செலுத்தப்படும் இழப்பீட்டுத் தொகையை (சம்பளத்தின் அடிப்படையில்) ரூ. 1,140,000 தொடக்கம் ரூ. 2,000,000 வரை அதிகரித்தல்.

IV. தற்போது ரூ. 196,083.80 தொடக்கம் ரூ.550,000 வரை செலுத்தப்படும் நிரந்தர உடல் உபாதைக்கு செலுத்தப்படும் இழப்பீட்டுத் தொகை (சம்பளத்தின் அடிப்படையில்) ரூ. 1,200,000 தொடக்கம் ரூ. 2,000,000 வரை அதிகரித்தல்.

V. தற்போது ரூ.1320 தொடக்கம் ரூ. 5,500 வரை தற்காலிக உடல் உபாதைக்கு செலுத்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை (அரை மாதச் சம்பளத்தின் அடிப்படையில்) ரூ. 5,000 தொடக்கம் ரூ. 47,500 வரை அதிகரித்தல்.

இழப்பீடு அறவிடும் நடைமுறைகளைத் துரிதப்படுத்துவதற்காக இழப்பீட்டு ஆணையாளர் அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ள பிஸ்கல்ஃபதிவாளர் மூலம் சொத்துக்கள் அரச உடமையாக்கப்பட்டு இழப்பீட்டு அறவீடுகளை மேற்கொள்ளல்

தொழிலாளர் இழப்பீட்டுக் காப்புறுதி முறைமையை புதிதாக அறிமுப்படுத்தல்  அதற்கமைய, மேற்குறிப்பிட்ட திருத்தங்களை உள்வாங்கும் வகையில் சட்டமூலமாக்கல் மூலம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்தை மேலும் திருத்தியமைப்பதற்காக தொழில் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

03) அரச பாடசாலைகளில் இரண்டாம் நிலைக்கல்வியின் தரப்பண்பு விருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையைப் பெறல்

பெறுபேற்றை அடிப்படையாகக் கொண்ட கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வித் துறைக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான அங்கீகாரம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதற்கமைய, கீழ்வரும் துறைகளில் குறித்த நிதியை முதலிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

• இரண்டாம் நிலைக்கல்வி பாடவிதானங்கள் மற்றும் மதிப்பீட்டு முறைமையை மறுசீரமைத்தல்

• வசதிகளுடன் கூடிய முழுமையான இரண்டாம் நிலைக்கல்விப் பாடசாலை வலையமைப்பை பிரதேச செயலக மட்டத்தில் விருத்தி செய்தலும் அதற்காக அனைத்து மாணவர்களுக்கும் தரமான இரண்டாம் நிலைக்கல்வி வாய்ப்புக்களை உறுதிப்படுத்தல்

• தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரித்தல்

• கல்வியியல் கல்லுர்ரிகளை பட்டம் வழங்கும் நிலைக்கு உயர்த்துதல்

• ஆசிரியர் சமநிலையைப் பேணுதல் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குதல் மூலம் மாணவர் தேர்ச்சி மட்டத்தை அதிகரித்தல்

'சுபீட்சத்தின் நோக்கு' தேசிய கொள்கைப் பிரகடனத்திற்கமைய கல்வி மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துவதற்காக மேற்குறிப்பிட்ட 400 அமெரிக்க டொலர்களை முதலிடுவதற்கான நிகழ்ச்சித்திட்டம் 2020-2025 காலப்பகுதியில் கல்வித் துறையிலுள்ள ஏற்புடைய நிறுவனங்கள் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

04) தொழிற்சாலைகளை அமைப்பதற்காக பிராந்திய கைத்தொழிற் பேட்டைகளில் காணித்துண்டுகளை ஒதுக்குதல்

பிராந்திய கைத்தொழில் சேவைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு 10 கருத்திட்டங்களுக்கு முதலீட்டாளர்கள் 10 பேருக்கு கீழ்காணும் வகையில் காணித்துண்டுகளை ஒதுக்குவதற்கு கைத்தொழில் அமைச்சின் கருத்திட்ட மதிப்பீட்டுக் குழுவால் சிபார்சு செய்யப்பட்டுள்ளது

• புத்தள கைத்தொழிற் பேட்டையில் 04 கருத்திட்டங்கள்

• லாக்ஷ உயன கைத்தொழிற் பேட்டையில் ஒரு கருத்திட்டமும்

• நாலந்த எல்லாவெல, புத்தளம் கரந்தெனிய மற்றும் படஅத்த போன்ற கைத்தொழில் பேட்டைகளில் ஒரு கருத்திட்டமும்

முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டங்களுக்கு குறித்த முதலீட்டாளர்களால் 1144 மில்லியன் ரூபாய்கள் முதலிடப்படவுள்ளதுடன், அதன் மூலம் நேரடி தொழில் வாய்ப்புக்கள் 555 உருவாகும்.

அதற்கமைய, குறித்த 10 முதலீட்டாளர்களுக்கு 35 வருடகாலக் குத்தகை அடிப்படையில் காணித்துண்டுகளை ஒதுக்கி வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05) கொவிட் 19 தொற்றின் பின்னர் சுற்றுலாத் துறைக்கு உதவி வழங்கும் மானிய நடவடிக்கைகளை நீடித்தல்

கொவிட் 19 தொற்று நிலைமையால் வாழ்வாதாரம் இழக்கப்பட்ட இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா வழிகாட்டுனர்கள் மற்றும் சுற்றுலா சாரதிகளுக்கு மானியம் வழங்குவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் 186 மில்லிய்ன் ரூபாய்களை குறித்த அதிகாரசபை நிதி ஒதுக்குவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளதுடன், குறித்த நிதி சுற்றுலாத்துறை வழிகாட்டிகளுக்கும் சாரதிகளுக்கும் மானியம் வழங்குவதற்காக நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மானியங்கள் சுற்றுலாத் துறையிலுள்ள கீழ்வரும் நபர்களுக்கும் வழங்குவதற்காக அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

• 2020.08.31 இற்கு முன்னர் கீழ்க்காணும் விண்ணப்பங்களுக்கு, இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரசபையின் கண்காணிப்பின் கீழ் அல்லது வேறு சுற்றுலாத்துறைச் சங்கங்களால் பயிற்றுவிக்கப்பட்ட சுற்றுலா சாரதிகள் / சுற்றுலா பேரூந்து சாரதிகள் மற்றும் உதவியாளர்கள்/ டுக் டுக் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் சபாரி ஊர்தி சாரதிகளுக்கு ஒருவருக்கு ஒரு தடவை மாத்திரம் செலுத்தப்படும் ரூ. 15,000 இனைச் செலுத்தல்

• மாகாண சபையால் பயிற்றுவிக்கப்பட்ட இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டுனர்களுக்காக ஒருவருக்கு ஒரு தடவை மாத்திரம் செலுத்தப்படும் ரூ. 20,000 இனைச் செலுத்தல்

06) மட்டக்களப்பு பொது நூலகக் கட்டிடத்தொகுதி நிர்மாணித்தல்

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகக் கட்டிடத்தின் தரைமாடி கட்டிட வேலைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த கட்டிட நிர்மாணத்திற்காக தேசிய பெறுகைக் கோரல் கோரப்பட்டுள்ளதுடன், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரை மூலம் குறித்த ஒப்பந்தம் 214.07 மில்லின் ரூபாய்களுக்கு (VAT இல்லாமல்) பொக்ஸ் மார்க்கட்டின் தனியார் கம்பினிக்கு வழங்குவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரான மாண்புமிகு பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

07) சாந்ர மொநொக்லோனல் பியூரிபயிட் மற்றும் டிடர்ஜன் ட்ரீட்டட் டிறயிவ் பக்டர் VIII பிறக்ஷன் 200 ஐயூ - 350 ஐயூ வயல்ஸ் வழங்கலுக்கான பெறுகை

2021 ஆண்டுக்கான, ஈமோபீலியா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் ) சாந்ர மொநொக்லோனல் பியூரிபயிட் மற்றும் டிடர்ஜன் ட்ரீட்டட் டிறயிவ் பக்டர் VIII பிறக்ஷன் 200 ஐயூ - 350 ஐயூ வயல்ஸ் 85,000 இனை கொள்வனவு செய்வதற்கான பெறுகைக் கோரல், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழுவின் சிபார்சுக்கமைய சுவிஸ்சர்லாந்து M/s Baxalta GmbH மொத்தச் செலவு மற்றும் பொதி வசதிகள் செலவு உள்ளிட்ட 5.185 அமெரிக்க டொலர் தொகைக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

08) முன் மூடியுள்ள எனொக்ஷபாரின் சோடியம் ஊசி மருந்து 4000 ஐயூ, 0.4 மில்லிலீட்டர் சிரின்ஜர் 160,000 இனை கொள்வனவு செய்வதற்கான பெறுகை

இதய நோயாளர்களுக்கான சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் முன் மூடியுள்ள எனொக்ஷபாரின் சோடியம் ஊசி மருந்து கொள்வனவுக்கான ஒப்பந்தம் M/s ABC Pharma Services (Pvt) Ltd இற்கு ஒப்படைப்பதற்காக 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த கொள்வனவு உத்தரவு 2020 பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி வழங்குனருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த மருந்துக்கு சிரின்ஜர் 160,000 தேவையாயிருப்பதாக பின்னர் தெரியவந்துள்ளது. அதற்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய மீள் கொள்வனவு உத்தரவாக முன் மூடியுள்ள எனொக்ஷபாரின் சோடியம் ஊசி மருந்து 4000 ஐயூ, 0.4 மில்லிலீட்டர் சிரின்ஜர் 160,000 இனை கொள்வனவு செய்வதற்கான பெறுகையை ஆரம்ப வழங்குரான M/s ABC Pharma Services (Pvt) Ltd இற்கு மொத்த செலவு 126.96 மில்லியன் ரூபாய்களுக்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

09) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இறக்குமதிப் பொருட்களுக்கான முனையக் கட்டிட நிர்மாணம் - படிமுறை I

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இறக்குமதிப் பொருட்களுக்கான முனையக் கட்டிட நிர்மாணம் - படிமுறை இற்கான பெறுகைக் கோரல் செயன்முறையை ஆரம்பிப்பதற்காக 2019 ஆம் ஆண்டு மே மாதம் 07 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பெறுகைக் கோரல் செயன்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பெறுகை ஆட்சேபனை சபையால் முன்வைக்கப்பட்டுள்ள சிபார்சுகளைக் கவனத்தில் கொண்டு, குறித்த ஒப்பந்தம் 2.37 பில்லியன் ரூபாய்களுக்கு வரையறுக்கப்பட்ட நவலோக கன்ஸ்ரக்ஷன் இற்கு வழங்குவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

10) 2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தைப் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தல்

2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலம், சட்டவாக்கத்திற்கான அங்கீகாரம் 2020 ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய 2020 ஆம் ஆண்டுக்கான மொத்த மீண்டெழும் செலவுகள் 2,692 பில்லியன் ரூபாய்களாவதுடன் மூலதனச் செலவு 1,846 பில்லியன்களாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த மதிப்பீட்டு ஒதுக்கீடுகளில் கீழ்வரும் ஒதுக்கீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.

• இதற்கு முன்னர் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்காலக் கணக்குகள் இரண்டின் மூலமான ஒதுக்கீடுகள்

• அரசியலமைப்பின் 150 ஆவது அரசியலமைப்பின் 3 ஆம் உப அரசியலமைப்பின் பிரகாரம் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட, 2020 ஆம் ஆண்டுக்கான மதிப்பீடப்பட்ட செலவுகள் தொடர்பான ஒதுக்கீடு

• 2019 ஆம் ஆண்டில் செலவிடப்பட்டுள்ள ஆனாலும் கணக்கு வைக்கப்படாத 211 பில்லின் ரூபாய்கள் கணக்கு வைப்பதற்கான ஒதுக்கீடு

அதற்கமைய, 2020 ஆம் நிதியாண்டுக்கான சட்டமூலமாக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. குறித்த சட்ட மூல வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப்படுவதற்கும், பின்னர் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றுக்குச் சமர்ப்பிப்பதற்கும் மாண்புமிகு பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

11) 2021 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

2021 நிதியாண்டுக்காக ஒதுக்கீட்டுச் சட்டமூலம், சட்டமூலமாக்குவதற்கு 2020 செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான மொத்த மீண்டெழும் செலவுகள் 2,690 பில்லியன் ரூபாய்களாவதுடன் மூலதனச் செலவு 2,216 பில்லியன்களாகவும் மதிப்பிடப்பட்டு சட்டமா அதிபரின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. குறித்த சட்ட மூல வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப்படுவதற்கும், பின்னர் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றுக்குச் சமர்ப்பிப்பதற்கும் மாண்புமிகு பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

12) பாடசாலை சீருடைத் துணி கொள்வனவு – 2021

உள்ளூர் துணி உற்பத்தியாளர்களிடம் 2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலைச் சீருடைத் துணிக் கொள்வனவுக்கும், அதற்கமைய தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பெறுகைச் செயன்முறை துரிதமாக நிறைவு செய்வதற்கும் 2020 செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய பாடசாலைச் சீருடைத் துணி குறித்த தரத்திற்கமைய உற்பத்தி செய்து, பகுதியாக்கப்பட்டு, பொதியிடப்பட்டு கோட்டக் கல்விப் பணிமனைகளுக்கு விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் வான்கார்ட் இன்டர்ஸ்ரீஸ் (தனியார்) கம்பனி, தங்கொட்டுவ வீவிங் மில்ஸ், பிரபா டெக்ஸ் இன்டஸ்ரீஸ், மற்றும் கிரியேடிவ் டெக்ஸ்டயில் (தனியார்) கம்பனிகளுக்கு வழங்குவதற்கு கல்வி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

13) பாடசாலையில் ஒரு வகுப்பறையில் இருக்க வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை

முதலாம் தரத்திற்கு சேர்த்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள சுற்றிக்கைக்கு அமைய அதிபர்கள் செயற்படுவர். அதேபோல் புலமைப்பரிசில் பரீட்சைப் புள்ளியின் அடிப்படையில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தர வகுப்புக்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கும் குறித்த பாடசாலை அதிபர்கள் நடவடிக்கையெடுப்பர்.

மேலும் 37/2008 மற்றும் 33/2009 சுற்றறிக்கைகளுக்கமைய பாடசாலை அதிபர்களின் ஒப்புதலுடன் இடைத் தரய்களுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். அதற்கமைய இடமாற்றத்தால் வதிவிடம் மாற்றமடைதல், வெளிநாட்டிலிருந்து வருகை தரல், பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படல், நீதிமன்ற நீதவான்கள், அரச விசேட நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் அரச மருத்துவர்கள், பாடசாலைகளில் மற்றும் கல்வி அமைச்சில் அல்லது அதனுடன் இணைந்த திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், இலங்கை கல்வி நிர்வாக சேவை மற்றும் ஆசிரியர் சேவை உத்தியோகத்தர்கள் போன்றவர்கள் இடைத் தரங்களில் சேர்த்துக் கொள்வதற்கு தகுதியானவர்களாவர்.

அவ்வாறே மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் ஏற்பட்ட அநீதிகளால் தகுதிவாய்ந்தவர்கள், விசேட தேவையுடைய மாணவர்கள் மற்றும் சமூகப் பராமரிப்பு நிலையங்களிலுள்ள மாணவர்கள் போன்றவர்களும் இடைத் தரங்களுக்கு சேர்த்துக் கொள்வதற்குத் தகுதிவாய்ந்தவர்களாவர்.

அவ்வாறு மாணவர்களை உள்வாங்குவதில் விண்ணப்பங்களைக் கவனத்தில் கொண்டு, ஒரு வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கைணை அதிகரிப்பதற்காக தற்போது பின்பற்றப்பட்டு வரும் முறைகளைத் திருத்தியமைத்து மேலும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பொறிமுறையை அறிமுகஞ் செய்வதற்காக கல்வி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

14) கடல் அட்டை (Sea Cucumber) மற்றும் மட்டி (Consh Shells) போன்ற கடல்வாழ் உயிரினங்கள் சேகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சுழியோடி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக தடை செய்தல்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தால் யாழ்குடா நாட்டின் மேற்குக் கடற்கரையில் கடல் அட்டை (Sea Cucumber) மற்றும் மட்டி (Consh Shells) போன்ற கடல்வாழ் உயிரினங்கள் சேகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சுழியோடி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுழியோடிகள் குறித்த கடற்கரையில் தற்காலிகமாக வசித்துக் கொண்டு அவற்றில் ஈடுபடுகின்றனர்.
குறித்த நடவடிக்கைகளுக்காக அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள சில சுழியோடிகள் குறித்த அனுமதியை மீறி இழுவைப்படகு முலம் கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களுடன் சட்ட விரோதக் கடத்தல்களில் ஈடுபடுவதாக் தெரிய வந்துள்ளது. அந்நிலைமையால் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுக்கு கொவிட் 19 தொற்று ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய கடல் அட்டை (Sea Cucumber) மற்றும் மட்டி (Consh Shells) போன்ற கடல்வாழ் உயிரினங்கள் சேகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சுழியோடி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக தடை செய்வதற்கு கடற்றொழில் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Teacher Survey Form : Education Ministry
October 06, 2020

Teacher Survey Form : Education Ministry

 

Again the closing date for the teacher survey application has been extended.

Please read the instructions by clicking "Teacher Survey Form" which is on your left side of this page. If you find some difficulties to login to the survey form, please send us an email to nemis.moe@gmail.com mentioning your name, NIC number (if you have two, send us both old and new), your school name, Zone and your contact number.

Closing Date 20.10.2020

Instruction on Teacher Survey Form



Click Below for Mobile App for Teachers

Click Below for Teacher Survey form

05/10/2020

Course : National Diploma in Technology (Moratuwa Universtiy)
October 05, 2020

Course : National Diploma in Technology (Moratuwa Universtiy)


Applications are invited from A/L Maths Students (2017, 2018 & 2019) for the admission to the National Diploma in Technology Course From University of Moratuwa

Full Time Course

3 Years

Below 24 years of age

Closing Date 13.11.2020

More Details on This week gazette ( Get the gazette paper on coming Friday 09.10.2020)





Video from Education  Ministry:  Appreciation of teachers and principals
October 05, 2020

Video from Education Ministry: Appreciation of teachers and principals




“ ගුරු ප්‍රතිභා ප්‍රභා”

ලෝක ගුරු දිනයට සමගාමීව සෑම වසරකම ඔක්තෝබර් 06 වන දින අධ්‍යාපන අමාත්‍යාංශය මගින් “ ගුරු ප්‍රතිභා ප්‍රභා” වැඩසටහන උත්කර්ෂවත් අන්දමට පවත්වනු ලබයි. මෙම වසරේදී මුහුණ පෑමට සිදු වූ කොවිඩ් 19 වසංගත තත්වය හේතුවෙන් “ ගුරු ප්‍රතිභා ප්‍රභා” වැඩසටහන පැවැත්වීමට නොහැකිවන බැවින් ගුරු හා විදුහල්පතිවරුන්ගේ අමිල මෙහෙවර අගය කරනු වස් මෙම විඩියෝ පටය ඉදිරිපත් කරනු ලබයි.


“குரு பிரதீபா பிரபா”

உலக ஆசிரியர் தினத்திற்கு இணைவாக ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 06 ஆந் திகதி கல்வி அமைச்சினால் “குரு பிரதீபா பிரபா” வேலைத்திட்டம் மிகவும் கோலாகலமான முறையில் நடாத்தப்படுகின்றது. இவ் வருடம் முகங் கொடுக்க நேர்ந்த கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணத்தால் “குரு பிரதீபா பிரபா” வேலைத்திட்டத்தை நடாத்த முடியாமல் போவதால் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் விலை மதிக்க முடியாத பணியினை பாராட்டும் வகையில் இந்த வீடீயோ ஒளிப்படம் முன் வைக்கப்படுகின்றது.


 


Message from Exam Department : Regarding Services
October 05, 2020

Message from Exam Department : Regarding Services

Message from

Exam Department

Regarding Services

විභාග දෙපාර්තමේන්තුවෙන් පණිවිඩය: සේවා සම්බන්ධයෙන්

பரீட்சைத் திணைக்களத்தின் அறிவித்தல் : சேவைகள் தொடர்பாக

 



நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு, பரீட்சைத் திணைக்களத்தின் சான்றிதழ்கள் வழங்கும் செயற்பாடுகள் நிகழ்நிலையில் மாத்திரம் மேற்கொள்ளப்படும். 

பரீட்சைத் திணைக்கள சூழலில் பொதுமக்கள் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 

மீண்டும் அறிவிக்கும் வரை ஒருநாள் சேவை மற்றும் சாதாரண சேவை வழங்கும் கவுண்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

-பரீட்சைத் திணைக்களம்-

Exam Postponed : Official Language (Oral) Exam
Teachers Day Message from Education Ministry :
October 05, 2020

Teachers Day Message from Education Ministry :



Teachers Day Message

from Education Ministry

අධ්‍යාපන අමාත්‍යාංශයේ ගුරු දින පණිවිඩය

கல்வி அமைச்சின் ஆசிரியர் தின செய்தி

Sinhala and Tamil


“තීරණාත්මක අභියෝගයන්ට නායකත්වය සපයමින් අනාගතය ප්‍රතිනිර්මාණය කරන දැයේ ගුරු පරපුර”


රටක සියලුම අධ්‍යාපන ප්‍රතිපත්ති ප්‍රායෝගිකව ක්‍රියාවට නංවන ආයතනය වන්නේ පාසලයි. මානව සංස්කෘතිය පවරාදීමේ දී ප්‍රමුඛතම ගාමක බලවේගය (Driving Force) අධ්‍යාපනය වන බැවින් පාසල නමැති සමාජ සංස්ථාවට වැදගත් කාර්යභාරයක් පැවරී ඇත. පාසල දරුවකුගේ ජීවිතයට ශක්තිමත් අඩිතාලමක් සපයනු ලබන කේන්ද්‍රස්ථානයයි. වයස අවුරුදු 06 දී පාසලට පිවිසෙන දරුවකුගේ දෙවන මවුපියන් විදුහල්පතිවරුන් හා ගුරුවරුන් ය. සිසුන්ට දැනුම ලබාගැනීමට, කුසලතා වැඩිදියුණු කිරීමට, ධනාත්මක ආකල්ප ගොඩනගා ගැනීමට මෙන්ම සාර්ථකත්වයට නිවැරදි මාවත තෝරාගැනීමට මඟ පෙන්වා දෙනු ලබන්නේ විදුහල්පතිවරුන් හා ගුරුවරුන්ය.

සමාජ, ආර්ථික, සංස්කෘතික විවිධතා සහිත දරුවන් හට සමාන අධ්‍යාපන අවස්ථා සලසා දෙමින් ඔවුන්ගේ අනාගතය නිර්මාණයෙහි ලා ගුරුවරයා විසින් ඉටු කරන කාර්යයභාරය සුවිශේෂී වේ. දසතින් ගලා එන දැනුම් ප්‍රවාහය, අවශෝෂණය කර ගනිමින් තම අත්දැකීම් හා මුසු කොට උචිත ඉගෙනුම් ඉගැන්වීම් ක්‍රමවේද ඔස්සේ දරුවන් වෙත සම්ප්‍රේෂණය කරනුයේ ගුරුවරයා ය. ගුණ නැණ බෙලෙන් යුතු සමබර පුරවැසියකු තැනීම සඳහා කැපවීමෙන් කටයුතු කරන ගුරුභවතුන් සිය වර්තමානය දැයේ හෙට දවස වෙනුවෙන් නිර්ලෝභීව කැප කරති. ඒ අනුව පරපුරෙන් පරපුරට සංස්කෘතිය පවරා දෙමින් මිනිස් වර්ගයාගේ යහපැවැත්ම උදෙසා මාර්ගෝපදේශ සැපයීම හේතුවෙන් ලොවෙහි උතුම්ම වෘත්තිකයා වන්නේ ගුරුවරයාය.

ගුරුවරයාගේ විශේෂ අවධානය ඉගැන්වීම් කාර්ය කෙරෙහි යොමු වී පැවතිය ද වර්තමානයේ දී එය පුද්ගල සංවර්ධනය, සමාජ සංවර්ධනය, ශිෂ්‍ය ඉගෙනුම් අත්දැකීම් පුළුල් පරාසයකට යොමු කිරීම වැනි ක්ෂේත්‍ර ගණනාවක් සමඟ බැඳී පවතී. වසර 30 කට පමණ එපිටින් වූ ලෝකය සඳහා ප්‍රවිශ්ටවන දරුවන් නිර්මාණය කරන ගුරුවරයා අනාගතය විනිවිද දකින්නෙකු විය යුතු ය. බොහෝ විට ගුරුවරුන් දෙමපියෙකු, මිතුරෙකු, උපදේශකයෙකු, ආරක්ෂකයෙකු වශයෙන් විවිධ භූමිකා ඔස්සේ කටයුතු කරමින් සමාජයේ වටිනා සාමාජිකයන් වීමට සිසුන්ට මඟපෙන්වනු ලබන අතරම සිසු දරුවන්ට යහපත් ආදර්ශ සැපයීම තුළින් එම මෙහෙවර වඩාත් සාර්ථකව ඉටු කරති. විවිධ ප්‍රවේශ ඔස්සේ සිදුවන ශිෂ්‍ය සංවර්ධන ක්‍රියාවලිය සඳහා ඵලදායීව දායකවීමට නම් ගුරුවරයා වෘත්තීයමය නිපුණයෙකු විය යුතු ය. පාසලේ දී මෙන්ම සමාජයේ දී ද තම ගුරු භූමිකාව නිවැරදි ව හසුරුවා ගැනීම සහ විවිධ අවශ්‍යතාවලට අනුරූප වන සේ තම කාර්යභාරය ඉටු කිරීම ගුරුවරයාගේ වගකීමකි. 

වසර 2030 දී සාක්ෂාත් කර ගැනීමට අපේක්ෂිත තිරසර සංවර්ධන ඉලක්කයක් වන ගුණාත්මක අධ්‍යාපනයක් ලබා දීම සහ ශ්‍රී ලංකාවේ නව අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ ක්‍රියාවට නැංවීම සඳහා දැනුම, කුසලතා, ආකල්ප හා වටිනාකම්වලින් සමන්විත පාසල් ප්‍රජාවක් බිහි කිරීම අත්‍යවශ්‍ය වේ. ඒ සඳහා අධ්‍යාපන පද්ධතිය තුළ ගුරුවරයා සිදු කරන සේවය කොතරම් දුරට ගුණාත්මක ද යන්න ස්වයං ව විමසීමට ලක් කිරීම ඉතා වැදගත් වේ. එමඟින් ගුරු කාර්යභාරය පිළිගත් සහ අපේක්ෂිත ප්‍රමිතියට අනුකූල ව පවත්වා ගැනීම සඳහා යම් මඟපෙන්වීමක් ගුරුවරයාට ලැබෙන අතර, එය වඩාත් ගුණාත්මකභාවයෙන් යුතු ඉගෙනුම් ඉගැන්වීම් ක්‍රියාවලියක් ස්ථාපිත කිරීම සඳහා ඉවහල් වනු ඇත. ඕනෑම කාර්යයක ගුණාත්මකභාවය හා ප්‍රමිතිය රඳා පවතිනුයේ, එම කාර්යය හා සබැඳි පුද්ගල නිපුණතා මත වන අතර, ප්‍රශස්ත වූ ඉගෙනුම් ඉගැන්වීම් ක්‍රියාවලියක් පාසල් පද්ධතිය තුළ ස්ථාපිත කිරීම සඳහා නිපුණතාවලින් පරිපූර්ණ වූ ගුරුභවතුන් සිටීම අත්‍යවශ්‍ය වේ. 

සමාජ, ආර්ථික සහ සංස්කෘතික වෙනස්කම් හමුවේ ගුරුවරයාගේ කාර්යභාරය ද දිනෙන් දින පරිණාමයට ලක් වී ඇත. විශ්වීය තත්වයන්ට අනුව සහ රැකියා‍ වෙළඳ‍ පොළ හා ගැළපෙන පුරවැසියෙකු නිර්මාණය කිරීමට සිදුවීම මෙන්ම අන‍පේක්ෂිතව ලොවම මුහුණ පෑ කොවිඩ් 19 ව්‍යසනය වැනි අවස්ථා හමුවේ ද ගුරුවරුන් මුහුණ දුන් අභියෝග රාශියකි. ඒවා සඳහා නොසැලී මුහුණ දෙමින් ලොව පුරා ගුරුභවතුන් සාධනීය කාර්යභාරයක් ඉටු කරමින් සිටිති. ශ්‍රී ලංකාවේ ද ගුරුභවතුන් විවිධ වූ දුෂ්කරතාවයන් මැද තම කාලය, ශ්‍රමය කැප කරමින් සුවහසක් වූ දරු දැරියන්ගේ නැණ නුවණ පාදන්නට ගත්තා වූ වෑයම වත්මන් සමාජයේ බොහෝ කතා බහකට ලක් විය. කෝවිඩ් 19 ව්‍යසන අවස්ථාවේ දී ද නිවසේ වෙසෙන දරුවන් වෙනුවෙන් අන්තර්ජාලය ඔස්සේ විෂය ආවරණය කිරීම සඳහා ගත් උත්සාහය ප්‍රශංසනීය ය. අවම පහසුකම් යටතේ වුව ද පවතින සම්පත් කළමනාකරණය කර ගනිමින් ගුණාත්මක අධ්‍යාපනයක් ලබා දීමට ඇප කැපවන ශ්‍රී ලාංකේය ගුරුභවතුන් අතිශයින්ම අගය කළ යුතු ය. 

ගුරුවරයෙකුගේ නිපුණතා පිළිබඳ අවධානය යොමු කිරීමේ දී ශිෂ්‍ය අවශ්‍යතා, විවිධතා හා විභව්‍යතාවල වැදගත්මක හඳුනා ගනිමින් ඵලදායිව ඉගෙනුම් ඉගැන්වීම් ක්‍රියාවලියේ නිරත වීම ඉතා වැදගත් වන අතර ඊට අනුකූල ව උචිත උපායමාර්ග, ඉගෙනුම් ක්‍රම හා ක්‍රම ශිල්ප භාවිත කළ යුතු ය. යාවත්කාලීන වූ ඉගෙනුම් සම්පත් සහ නිර්මාණශීලි ඉගෙනුම් පරිසරයක් සකස් කර ප්‍රශස්ත ලෙස භාවිත කිරීම මෙන් ම ඉගෙනුම් ඉගැන්වීම් ක්‍රියාවලිය සඳහා හැකි සෑමවිටම නව තාක්ෂණික ක්‍රමවේද භාවිත කරමින් සිසුන් ඒ සඳහා යොමු කිරීම ඉතා වැදගත් ය. සිසුන් ස්වයං අධ්‍යයනයට යොමු කිරීමට අවශ්‍ය මගපෙන්වීම හා ශිෂ්‍යයාගේ සැබෑ ජීවන අත්දැකීම් හා සම්බන්ධ වන සේ ඉගෙනුම් ඉගැන්වීම් ක්‍රියාවලිය ගැලපීම අත්‍යාවශ්‍ය ය. විවිධ කුසලතා (චින්තන හැකියා, මෘදු කුසලතා හා නිර්මාණශීලී ක්‍රියාකාරකම්) සංවර්ධනය සඳහා සිසුන් යොමු කළ යුතු අතර උචිත පරිදි තක්සේරුකරණය හා ඇගයීම ක්‍රියාත්මක කර ඉගෙනුම් ඵල සාධනය කරා යොමු කළ යුතු වේ.

මේ සඳහා වෘත්තික‍යෙක් වශ‍යෙන් ගුරුවරයා සවිබල ගැන්වීම උ‍දෙසා පහත සදහන් ප්‍රධාන කරුණු කෙරෙහි අවධානය යොමු කරමින් කටයුතු කළ යුතු බවට ජාත්‍යන්තර මට්ට‍මෙන් ද අවධානය යොමු ව ඇත.

  • ගුරු වෘත්තිය සම්බන්ධව ජාත්‍යන්තරව පිළිගත් ප්‍රතිමාන අනුව සැකසූ ඇගයීම් උපකරණ භාවිතයෙන් ගුරු කාර්යභාරය නියාමනය.
  • එක් එක් රටවල ගුරුවරුන් සම්බන්ධ පවත්නා ප්‍රතිපත්ති සහ උපායමාර්ග විවරණය කර ඒවා සංවර්ධනය.
  • ගුණාත්මක ඉ‍ගෙනුම් ඉගැන්වීම් ක්‍රියාවලියක් සඳහා ගුරුවරුන්ගේ ධාරිතා සංවර්ධනය.
  • 2030 වර්ෂ‍ය වනවිට අත්පත් කර ගත යුතු අධ්‍යාපනය සම්බන්ධ තිරසාර සංවර්ධන අරමුණු කරා ළඟා වීම සඳහා ගුරුවරුන්ගේ දැනුම, ඉගැන්වීම් සහ නියාමන ක්‍රමවේද සංවර්ධනය.
  • ගුණාත්මක ඉ‍ගෙනුම් ඉගැන්වීම් ක්‍රියාවලියක් සඳහා ගුරුවරුන්ට මාර්ගෝප‍දේශ සැපයීම සහ දැනුම හුවමාරු කර ගැනීමට අවස්ථාව සැලසීම.

එ‍මෙන්ම විධිමත් ප‍ටිපාටි අනුව බඳවා ගැනීම, විෂයානුබද්ධව පුහුණු කිරීම, වෘත්තීය සුදුසුකම් සම්පූර්ණ කිරීම‍ට අවස්ථා සැලසීම, අභිප්‍රේරණය කිරීම සහ අවශ්‍ය සම්පත් සැපයීම තුළින් ද ගුරුවරයා‍ එලදායී වෘත්තිකයෙකු වශයෙන් සංවර්ධනය කළ හැකිවේ.

විශ්වීය තත්වයන්ට ගැළපෙන පරිදි ශ්‍රී ලාංකික ගුරුවරයා සංවර්ධනය කිරීම සඳහා අධ්‍යාපන අමාත්‍යාංශය විසින් විවිධ කාර්යයන් ඉටු කරයි. ගුරුවරුන් සඳහා විවිධ වෘත්තීය සංවර්ධන අවස්ථා සැපයීම, ජාතික මට්ට‍මෙන් වාර්ෂිකව ගුරු හා විදුහල්පති ඇගයීම් වැඩසටහන් පැවැත්වීම ‍ මෙන්ම ගුරුවරුන්ගේ කාර්ය සාධනය ඉහල නැංවීම සඳහා ඉදිරි වර්ෂ‍යේ සිට ස්වයං තක්සේරු ක්‍රමවේදයක් ලෙස ගුරු නිපුණතා රාමුවක් පාසල් පද්ධතිය‍ට හදුන්වා දීමට ද සැලසුම් කර ඇත.

එ‍මෙන්ම ගුරු වෘත්තීය අභිමානය ඉහල නැංවීම පිණිස ශ්‍රී ලංකාවේ ගුරු සංගම් නායකයෙකු වන එම්.ජී.මෙන්ඩිස් මහතාගේ යෝජනාවකට අනුව 1990 වර්ෂ‍යේ සිට ලෝකයෙහිම ජාත්‍යන්තර ගුරු දිනය සැමරීම ලාංකිකයින් වන අපට සුවිශේෂී අවස්ථාවකි.

2020 වර්ෂ‍යෙහිද “තීරණාත්මක අභියෝගයන්ට නායකත්වය සපයමින් අනාගතය ප්‍රතිනිර්මාණය කරනුයේ ගුරුවරයාය” යන‍ තේමාව ඔස්සේ ජාත්‍යන්තර ගුරු දිනය සැමරීම‍ට සැලසුම් කර ඇත. විශේෂ‍යෙන්ම ගෝලීය වසංගත තත්වය හමුවේ ගුරුවරුන් මුහුණපෑ අභියෝග අත්පත් කරගත් සාධනීය තත්වයන්, නැවත පාසල් ආරම්භයත් සමඟ ඇතිව තිබෙන වෙනස්කම්වලට ගුරුවරුන් අනුගතවීම සම්බන්ධව ද මෙවර විශේෂ අවධානයක් යොමු ව ඇත.

දැයේ සුවහසක් සිසු ප්‍රජාව‍ගේ දිවිමග ඒකාලෝක කිරීමට නොමඳ ව වෙහෙසෙන විශිෂ්ට වූ ගුරු හා විදුහල්පතිවරුන‍්ගේ අමිල මෙහෙවර‍ට උපහාරයක්ම වේවා! යන්න අධ්‍යාපන අමාත්‍යාංශ‍යෙහි ප්‍රාර්ථනයයි. 


“தீர்க்கமான சவால்களுக்கு தலைமைத்துவம் வழங்கி எதிர்காலத்தை மீள கட்டியெழுப்பும் ஆசிரிய தலைமுறையினர் ”


ஒரு நாட்டின் அனைத்து கல்விக் கொள்கைகளையும் செயன்முறை ரீதயாக செயற்படுத்தும் நிறுவனம் பாடசாலையாகும். மானுட கலாசாரத்தைக் பகிர்ந்து கொள்வதில்; முதன்மையான சக்தியாகக் (Driving Force) கல்வி திகழ்வதால் பாடசாலை எனும் சமூக கூட்டுத்தாபனத்திற்கு இன்றியமையாத பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பாடசாலை ஒரு பிள்ளையின் வாழ்க்கைக்கு பலமான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கக்கூடிய கேந்திர நிலையமாகும். 06 வயதில் பாடசாலைக்கு உள்வரும் பிள்ளையினது இரண்டாம் பெற்றார்களெனப்படுபவோர் அதிபர்களும் ஆசிரியர்களுமே ஆவர். மாணவர்களுக்கு அறிவைப் பெற்றுக் கொள்வதற்குஇ திறன்களை விருத்தி செய்து கொள்வதற்குஇ நேர் ரீதியான மனப்பாங்கை கட்டியெழுப்புவதைப் போன்றே வெற்றிக்காக சரியான பாதையை தெரிவு செய்து கொள்வதற்கு வழி காட்டுபவர்கள் அதிபர்களும் ஆசிரியர்களுமேயாவர். 

சமூகஇ பொருளாதாரஇ கலாசார பல்வகைமையுடன் கூடிய பிள்ளைகளுக்கு சமமான கல்வி வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் எதிர்காலத்தை தோற்றுவிப்பதில் ஆசிரியரால் நிறைவேற்றப்படும் பணியானது தனிச் சிறப்பானதாகும். உலகளாவிய அளவில் பொங்கிவரும் அறிவுப் பிரவாகத்தை சமநிலையில் பேணி தனது அனுபவத்துடன் கலந்து பொருத்தமான கற்றல் கற்பித்தல் முறையியல்களின் துணையுடன் பிள்ளைகளுக்கு ஊடுகடத்துபவர் ஆசிரியரே. நற்குணம்இ அறிவு மற்றும் வலிமையுடன் கூடிய சமநிலையான பிரஜையை நிர்மாணிப்பதற்கென அர்ப்பண சிந்தையுடன் பணியாற்றும் ஆசியர்கள் தமது நிகழ்கால தேசத்தின் நாளைய தினத்திற்கென பரந்த மனப்பான்மையுடன் தம்மை அர்ப்பணிக்கின்றனர். அதற்கிணங்கஇ பரம்பரை பரம்பரையாக கலாசாரத்தை ஒப்படைத்து மானிட வர்க்கத்தின் சக வாழ்விற்கு வழிகாட்டலை வழங்கவென தரணியில் உயர்வான தொழில் வாண்மையாளராக இருப்பவர் ஆசிரியரே. 

ஆசிரியரின் விசேட கவனம் கற்பித்தல் பணியின்பால் செலுத்தப்பட்டுக் காணப்படினும் நிகழ்காலத்தில் அது தனிநபர் அபிவிருத்திஇசமூக அபிவிருத்திஇ மாணவர்களின் கற்றல் அனுபவங்களை பரந்ததொரு எல்லைக்கு இட்டுச் செல்லுதல் போன்ற துறைகள் பலவற்றுடன் இணைந்து காணப்படுகின்றது. சுமார் 30 வருடங்களுக்கு அப்பால் உள்ள உலகத்திற்குள் நுழையும் பிள்ளைகளை உருவாக்கும் ஆசிரியர் ஒருவர் எதிர் காலத்தை வெளிப்படையாக காணக் கூடிய ஒருவராக இருத்தல் வேண்டும். பெரும்பாலும் ஆசிரியர்கள் பெற்றாராகஇநண்பனாகஇஆலோசகராகஇ பாதுகாப்பவராக பல்வேறு வகிபாகங்களின் அடிப்படையில் செயலாற்றி மாணவர்களை சமூகத்தின் பெறுமதிமிக்க உறுப்பினர்களாவதற்கு வழிகாட்டும் அதேவேளைஇ மாணவர்களுக்கு சிறந்த முன்மாதிரியை வழங்குவதனூடாக அந்த பணியினை மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றுகின்றனர். பல்வேறு பிரவேசங்களினூடாக நிகழும் மாணவர் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கென விளைதிறன்மிக்க வகையில் பங்களிப்பு செய்ய வேண்டுமெனில்இ தொழில் ரீதியாக தேர்ச்சிமிக்க ஒருவராக ஆசிரியர் இருத்தல் வேண்டும். பாடசாலையைப் போன்றே சமூகத்திலும் தனது ஆசிரியர் வகிபாகத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளுதலும் பல்வேறு தேவைகளுக்கு ஒத்த வகையில் தனது பணிகளை நிறைவேற்றுதலும் ஆசிரியர் ஒருவரின் பொறுப்பாகும். 

2030 ஆம் ஆண்டில் அடைந்து கொள்ள எதிர்பார்க்கும் நிலைபேறான அபிவிருத்தி இலக்காவுள்ள தரமான கல்வியை வழங்குதல் மற்றும் இலங்கையின் புதிய கல்வி சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அறிவுஇ திறன்இ மனப்பாங்கு மற்றும் பெறுமதி என்பவற்றுடன் கூடிய பாடசாலை சமூகமொன்றை உருவாக்குதல் அத்தியாவசியமாகின்றது. அதற்கென கல்விப் புலத்தினுள் ஆசிரியரால் நிறைவேற்றப்படும் சேவை எந்த அளவிற்கு தரமானது என்பது தொடர்பாக சுயமாக ஆராய்தலுக்கு உட்படுத்துதல் மிக முக்கியமாகின்றது. அதனூடாக ஆசிரியர் பணியை ஏற்றுக் கொள்ளப்பட்ட மற்றும் உத்தேச தரங்களுக்கு அமைவாக பேணுவதற்கென சில வழிகாட்டல்கள் ஆசிரியருக்கு கிடைப்பதோடு அது மிகுந்த தரமிக்க வகையுடன் கூடிய கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு உதவியாக அமையும். ஏதேனுமொரு பணியின்போது பண்புத் தரம் மற்றும் தரஉறுதி என்பனஇ அப் பணிகளுடன் தொடர்;புடைய தனிநபர் தேர்ச்சியின் அடிப்படையில் தங்கியுள்ள அதேவேளைஇ சிறந்த கற்றல் கற்பித்தல் செயற்பாடொன்றை பாடசாலை முறைமையினுள் உறுதிப்படுத்திக் கொள்வதற்கென தேர்ச்சிகளில் பூரணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் இருப்பது அத்தியாவசியமாகின்றது. 

சமூகஇபொருளாதார மற்றும் கலாசார வேறுபாடுகளின் எதிரில் ஆசிரியரின் பணி தினம் தினம் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. பூகோள தன்மைகளுக்கு அமைவாகவும் தொழிற்; சந்தைக்குப் பொருத்தமானதுமான பிரஜைகளை உருவாக்க வேண்டியேற்படுவதைப் போன்றே எதிர்பாராத வகையில் முழு உலகும்; முகங் கொடுத்த கொவிட் 19 இடர் போன்ற சந்தர்ப்பங்களின் எதிரிலும் ஆசிரியர் முகங்கொடுத்த சவால்கள் ஏராளம். அவற்றிற்காக சளைக்காது முகங் கொடுத்து உலகளாவிய அளவில் ஆசிரியர்கள் நிரூபிக்கக் கூடிய பணியினை நிறைவேற்றியுள்ளனர். இலங்கையில் ஆசிரியர்கள் பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு மத்தியில் தமது நேரம்; மற்றும் உழைப்பு என்பனவற்றை அர்ப்பணித்து இலட்சக் கணக்கான மாணவர்களின் அறிவுக் கண்ணை திறப்பதற்கு எடுத்துக் கொண்ட முயற்சி நிகழ்கால சமூகத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளது. கொவிட் 19 இடர் சமயத்தில்; தமது வீடுகளிலேயே முடங்கிக் கிடந்த பிள்ளைகளுக்காக இணையத்தளத்தினூடாக பாடங்களை பதிலீடு செய்வதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை. குறைந்த வசதிகளாக இருப்பினும் கிடைக்கக் கூடிய வளங்களை முகாமைத்துவம் செய்து தரமான கல்வியை வழங்குவதற்கு அர்ப்பணிக்கும் இலங்கை தேசத்து ஆசிரியர்களை வெகுவாக பாராட்;ட வேண்டும். 

ஆசிரியர் ஒருவரின் தேர்ச்சி தொடர்பாக கவனஞ் செலுத்தும் போது மாணவர்களின் தேவைகள்இ பல்வகைமைஇ உள்ளார்ந்த ஆற்றல்களின் முக்கியத்துவத்தை இனங்கண்டு விளைதிறன்மிக்க கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுதல் மிகவும் இன்றியமையாததாகின்ற அதேவேளை அதற்கு அமைவாக பொருத்தமான உபாயங்கள்இ கற்றல் முறைகளையும் நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டும். தற்காலப்படுத்தப்பட்ட கற்றல் வளங்களையும் ஆக்கரீதியான கற்றல் சூழலையும் உருவாக்கி சிறப்பான முறையில் பயன்படுத்துவதைப் போன்றே கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக தன்னால் இயன்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் நவீன தொழில்நுட்ப முறையியல்களைப் பயன்படுத்தி மாணவர்களை அதற்கென ஈடுபடுத்துதல் மிகவும் முக்கியமாகும். மாணவர்களை சுய கற்றலுக்கு ஈடுபடுத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்களையும் மாணவரது நிஜ வாழ்க்கை அனுபவங்களுடன் தொடர்புபடும் வகையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஒப்பிட்டுக்; கொள்ளுதல் அத்தியாவசியமாகின்றது. பல்வேறு திறன்களின் (சிந்தனை ஆற்றல்இமென்திறன்கள் மற்றும் ஆக்கரீதியான செயற்பாடுகள்) அபிவிருத்திக்காக மாணவர்களை ஈடுபடுத்த வேண்டியதோடு பொருத்தமான வகையில் கணிப்பீட்டுச் செயன்முறைகளையும் மதிப்பீட்டையும் நடைமுறைப்படுத்தி கற்றல் பேற்று அடைவை நோக்கி இட்டுச் செல்ல வேண்டியுள்ளது. 

இதற்கென தொழில் வாண்மையாளர் எனும் அடிப்படையில் ஆசிரியரை வலுவூட்டுவதற்காக கீழ்க் குறிப்படப்பட்டுள்ள பிரதான விடயங்கள் தொடர்பாக கவனஞ் செலுத்;தி செயலாற்ற வேண்டியுள்ளதென சருவ தேச மட்டத்தில் கவனம் திரும்பியுள்ளது. 
  • ஆசிரியர் தொழில் தொடர்பாக சருவதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இயல்புநிலைக்கு அமைவாக ஒழுங்கமைக்கப்பட்ட மதிப்பீட்டு உபகரணங்களைப் பயன்படுத்தி ஆசிரியர்களின் பணிகளை கண்காணித்தல். 
  • வெவ்வேறு நாடுகளில் ஆசிரியர்கள் தொடர்பாக நடைமுறையிலுள்ள கொள்கைகள் மற்றும் உபாயங்கள் தொடர்பாக விளக்கமளித்து அவற்றை அபிவிருத்தி செய்தல். 
  • தரமான கற்றல் கற்பித்தல் செயற்;பாடுகள் தொடர்பான ஆசிரியர்களின் கொள்ளாற்றலை விருத்தி செய்தல். 
  • 2030 ஆம் ஆண்டளவில் அடைந்து கொள்ள வேண்டிய கல்வி தொடர்பான நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்களை நோக்கி அண்மிப்பதற்காக ஆசிரியர்களின் அறிவுஇ கற்பித்தல் மற்றும் கண்காணித்தல் முறையியல்களை அபிவிருத்தி செய்தல். 
  • தரமான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக ஆசிரியர்களுக்கு வழிகாட்டலை வழங்குதல் மற்றும் அறிவை பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல். 
அவ்வாறேஇ முறைசார்ந்த நடைமுறையொன்றிற்கு அமைவாக ஆட்சேர்ப்பு செய்தல்இ பாடரீதியாக பயிற்றுவித்தல்இ தொழிற் தகைமைகளைப் பூர்த்தி செய்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல்இ ஊக்குவித்தல் மற்றும் தேவையான வளங்களை வழங்குவதன் மூலம் ஆசிரியரை விளைதிறன்மிக்க தொழில் வாண்மையாளராக அபிவிருத்தி செய்ய முடியும். 

உலகளாவிய தரங்களுக்கு பொருந்தும் வகையில் இலங்கையின் ஆசிரியரை அபிவிருத்தி செய்வதற்காக கல்வி அமைச்சினால் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. ஆசிரியர்களுக்காக பல்வேறு தொழில் அபிவிருத்தி வாய்ப்புகளை வழங்குதல்இ தேசிய மட்டத்தில் வருடாந்தம் ஆசிரியர் மற்றும் அதிபர்களைப் மதிப்பீடு செய்யும் வேலைத்திட்டத்தை நடாத்துதலைப் போன்றே ஆசிரியர்களின் செயலாற்றுகைத் தரத்தை உயர்த்துவதற்காக அடுத்த வருடத்திலிருந்து சுய கணிப்பீட்டு முறையியலொன்றாக ஆசிரியர் தேர்ச்சி சட்டகமொன்றை பாடசாலை முறைமைக்கு அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 

அவ்வாறேஇ ஆசிரியர் தொழிலின் அபிமானத்தை உயர்த்துவதற்கென இலங்கையில் ஆசிரியர் சங்கங்களின் தலைவரான திரு.எம். ஜீ. மென்டிஸ் அவர்களின் பிரேரணைக்கு இணங்க 1990 ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய ரீதியில் சருவதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படுதல் இலங்கையர்களாகிய எமக்கு விசேட சந்தர்ப்பமாகும். 
2020 ஆம் ஆண்டில் “தீர்க்கமான சவால்களுக்கு தலைமைத்துவம் வழங்கி எதிர்காலத்தை மீள கட்டியெழுப்புபவர் ஆசிரியரே” எனும் கருப் பொருளின் அடிப்படையில் சருவதேச ஆசிரியர் தினத்தைக் கொண்டாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விசேடமாக உலகளாவிய அளவிலான தொற்றுநோய் நிலைமையின் எதிரில் ஆசிரியர்கள் முகங்கொடுத்த சவால்கள்இ அடைந்து கொண்ட நிரூபிக்கக் கூடிய நிலைமைகள்இ பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுடன் உருவாகியுள்ள மாற்றங்களுக்கு ஆசிரியர்கள் இயல்பாக்கம் பெற்றுள்ளமை என்பன தொடர்பாக இம்முறை விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

தேசத்தின; இலட்சக் கணக்கான மாணவர் சமூகத்தினுடைய வாழ்க்கைப் பாதையை ஒளிரச் செய்வதற்கு எண்ணற்ற வகையில் உழைக்கும் அதிசிறப்பான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் விலைமதிக்க முடியாத பணிக்கு பாராட்டுக்கள்! என்பது கல்வி அமைச்சின் வாழ்த்துக்களாகும்.

02/10/2020

Results Released : Catholic Dharmacharya  Exam - 2019 - 2020
GAZETTE  02 Oct 2020
October 02, 2020

GAZETTE 02 Oct 2020


IMPORTANT Notifications ON 
GAZETTE 
02 Oct 2020 
ගැසට් පත්‍රයේ වැදගත් දැනුම්දීම 
வர்த்தமானியின் முக்கியமான அறிவிப்புகள்

නාගරික ජනාවාස සංවර්ධන අධිකාරිය
නාගරික සංවර්ධන හා නිවාස අමාත්‍යාංශය
නාගරික සංවර්ධන, වෙරළ සංරක්ෂණ, අපද්‍රව්‍ය බැහැරලීම හා ප‍්‍රජා පවිත‍්‍රතා කටයුතු රාජ්‍ය අමාත්‍යාංශය
  • සහකාර අධ්‍යක්‍ෂ (සමාජ සජීවිකරණ)MM 1-1
  • තාක්ෂණ නිලධාරි JM 1-1
  • සංවර්ධන නිලධාරි MA 5-1
  • දත්ත සැකසුම් සහකාර MA5-1
  • ප‍්‍රජා සංවර්ධන සහකාර MA 3
  • තාක්‍ෂණික සහකාර MA 2-1
  • කළමනාකරණ සහකාර (තා. නො) MA1-1
  • සමාජ සංවර්ධන සහකාර MA 1-1
  • කාර්යාල කාර්ය සහයක PL 1
  • ලේඛන භාරකරු PL 1

අධිකරණ සේවා කොමිෂන් සභාව
ශ‍්‍රී ලංකා අධිකරණ සේවයේ පුරප්පාඩු
ශ‍්‍රී ලංකා අධිකරණ සේවයේ II පන්තියේ I ශ්‍රේණියේ අධිකරණ නිලධාරී (මහේස්ත‍්‍රාත්ත) නතුර සඳහා අයදුම්පත් කැඳවනු ලැබේ

අධිකරණ සේවා කොමිෂන් සභාව
පරිපාලන අභියාචන විනිශ්චය අධිකාරයේ සභාපති තනතුර

රාජ්‍ය සේවා, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍යාංශය
ශ‍්‍රී ලංකා පරිපාලන සේවයේ
ශ‍්‍රී ලංකා ඉංජිනේරු සේවයේ
ශ‍්‍රී ලංකා විද්‍යාත්මක සේවයේ
ශ‍්‍රී ලංකා වාස්තු විද්‍යාත්මක සේවයේ
ශ‍්‍රී ලංකා ගණකාධිකාරී සේවයේ 
ශ‍්‍රී ලංකා ක‍්‍රමසම්පාදන සේවයේ නිලධාරීන් සඳහා වන පළමුවන කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය - 2018 (II) සහ 

ශ‍්‍රී ලංකා පරිපාලන සේවයේ, 
ශ‍්‍රී ලංකා ගණකාධිකාරී සේවයේ සහ
ශ‍්‍රී ලංකා ක‍්‍රමසම්පාදන සේවයේ නිලධාරීන් සඳහා වන දෙවන කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය - 2019 (I)


සත්ත්ව නිෂ්පාදන හා සෞඛ්‍ය දෙපාර්තමේන්තුව
ශ‍්‍රී ලංකා සත්ත්ව නිෂ්පාදන හා සෞඛ්‍ය සේවයේ නිලධාරීන් සඳහා වන පළමුවන කාර්යක්‍ෂමතා කඩඉම් විභාගය - 2017/(2020)

සත්ත්ව නිෂ්පාදන හා සෞඛ්‍ය දෙපාර්තමේන්තුව
ශ‍්‍රී ලංකා සත්ත්ව නිෂ්පාදන හා සෞඛ්‍ය සේවයේ නිලධාරීන්ස ඳහා වන දෙවන කාර්යක්‍ෂමතා කඩඉම් විභාගය - 2017(2020)

වෙළෙ`ද අමාත්‍යාංශය
මිනුම් ඒකක, ප‍්‍රමිති හා සේවා දෙපාර්තමේන්තුව
මිනුම් ඒකක, ප‍්‍රමිති හා සේවා දෙපාර්තමේන්තුවේ ශ‍්‍රී ලංකා තාක්ෂණ සේවයේ රසායනාගාර සහකාර තනතුරු සඳහා පුහුණු ශ්‍රේණියට බඳවා ගැනීමේ විවෘත තරග විභාගය - 2020

නීති කටයුතු දෙපාර්තමේන්තුවේ විධායක සේවා ගණයේ නීති නිලධාරි ෂෂ ශ්‍රේණියේ නිලධාරීන් සඳහා වූ කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය - 2020

සංශෝධනයයි
ශ‍්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව

කළමනාකරණ සහකාර තාක්ෂණ ඛණ්ඩය 3 සේවා ගණයේ III ශ්‍රේණියේ තනතුරුවලට බඳවා ගැනීමේ ව්‍යුහගත සම්මුඛ පරීක්ෂණය - 2019 (2020)


நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை
நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு

  • உதவிப் பணிப்பாளர் (சமூகவலுவூட்டல்) MM 1-1
  • தொழில்நுட்ப உத்தியோகத்தர் JM 1-1
  • அபிவிருத்தி உத்தியோகத்தர் MA 5-1
  • தரவுத் திட்ட உதவியாளர் MA 5-1
  • சமுதாய அபிவிருத்தி உதவியாளர் MA 3
  • தொழில்நுட்ப உதவியாளர் MA 2-1
  • முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பமல்லாத) MA 1-1
  • சமூக அபிவிருத்தி உதவியாளர் MA1-1
  • அலுவலக பணி உதவியாளர் PL 1
  • சுவடிகள் பொறுப்பாளர் PL 1

நீதிச்சேவை ஆணைக்குழு
இலங்கை நீதிச் சேவையில் நிலவூம் வெற்றிடங்கள்
இலங்கை நீதிச்சேவையின் II ஆம் வகுப்பின் I ஆம் தரத்திற்குரிய (நீதிவான்) பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

நீதிச்சேவை ஆணைக்குழு
நிருவாக மேன்முறையீடுகள் நியாய சபைக்கான தலைவர் பதவி

அரசாங்க சேவைகள்இ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
இலங்கை நிர்வாக சேவை
இலங்கைப் பொறியியல் சேவை
இலங்கை விஞ்ஞான சேவை
இலங்கைக் கட்டடக் கலைஞர் சேவை
இலங்கைக் கணக்காளர் சேவை 
இலங்கைத் திட்டமிடல் சேவையிலுள்ள

அலுவலர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை -2018 (II) மற்றும்

இலங்கை நிர்வாக சேவை,  இலங்கை கணக்காளர் சேவை மற்றும் இலங்கைத் திட்டமிடல் சேவையிலுள்ள அலுவலா்களுக்கான இரண்டாம் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2019 (I)


கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்
இலங்கை கால்நடை உற்பத்திஇ-, சுகாதார சேவையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2017 (2020)

கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்
இலங்கை கால்நடை உற்பத்தி, சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான இரண்டாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2017 (2020)

வர்த்தக அமைச்சு
அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்
அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் இலங்கைத்தொழில்நுட்ப சேவையின் இரசாயன ஆய்வுகூட உதவியாளா்கள் பதவிக்காக பயிலுநர் தரத்திற்கு ஆட்சோ்ப்பதற்கான திறந்தப் போட்டிப் பரீட்சை - 2020

சட்ட அலுவல்கள் திணைக்களத்தின் நிறைவேற்றுச் சேவை வகுதியின் சட்ட அலுவலர் II ஆம் தரத்தைச் சேர்ந்த அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை –2020

திருத்தம்
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்
முகாமைத்துவ உதவியாளாளர் தொழில்நுட்பப் பிரிவு 3 ஆம் சேவை வகுதியின் தரம் III இன் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை -2019 (2020)


Click Below for the Circualr



01/10/2020

Video : Discussion with Directors of Exam Department and NIE

Popular

Recent

Ad

Learning Materials for Students