Breaking

Search This Blog

04/09/2020

Online Application : College of Education (for GCE A/L 2018)
September 04, 2020

Online Application : College of Education (for GCE A/L 2018)

Applications are called for College of Education for 2018 GCE A/L Students
ජාතික අධ්‍යාපන විද්‍යාපීඨ සදහා අයදුම් කිරීම 
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரல்
GCE A/L 2018 Students


Closing Date : 25 Sep 2020
Contact

0112787303
0112787385
0112787393
0112787399
0112787444 

Email: ncoe-application@moe.gov.lk



Click Below to Apply
Online Application

Click Below for the gazette

(Dont be hurry, System is slow, first get the circular, will available on Sunday Thinakaran, Silumina Paper)




Gazette Available with Sunday Silumina






03/09/2020

Bachelor of Laws Degree Programme (LLB) : Open University
September 03, 2020

Bachelor of Laws Degree Programme (LLB) : Open University

Issuing of Applications: 13th September 2020
Closing Date for Applications: 13th October 2020
Selection Test Date: December 2020

guruwaraya.lk

A person aged 18 years or above who has acquired any of the following educational/professional qualifications is eligible to apply for this programme

1.     Successful completion of Levels 1 and 2 of any Foundation Programmes conducted by the Open University of Sri Lanka;  OR

2.     Four passes, at the General Certificate of Education (Advanced Level) Examination under the old syllabus which had 4 subjects of which at least three passes should have been obtained at one sitting and the other subject should have been completed at a subsequent sitting  OR

3.     Three passes in core subjects at one sitting at the General Certificate of Education (Advanced Level) Examination (under the new syllabus which has 3 subjects)  OR

4.     An equivalent or higher qualification acceptable to the Senate of the Open University of Sri Lanka  OR

5.     Be an Attorney-at-Law.


Click Below to Apply Online (first need to create an account)

Online Application

 


Click Below for Further Details
20 th Amendment (Proposed)
September 03, 2020

20 th Amendment (Proposed)

Available in Sinhala, English and Tamil

 

20th Amendment

20 වන සංශෝධනය

20 ஆம் சீர்திருத்தம்

Sinhala


English



Tamil
 
GCE O/L Application 2020 : Closing Date Extended
September 03, 2020

GCE O/L Application 2020 : Closing Date Extended



Closing Date Extended , GCE O/L Exam 2020
අ.පො.ස. සාමාන්‍ය පෙළ විභාග අයදුම්පත් භාරගන්නා අවසන් දිනය දීර්ඝ කර ඇත
க.பொ.த சாதாரண தர பரீட்சை விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்பட்டுள்ளது

Closing Date 11.09.2020

Click Below for Application Details

Applications should be sent by registered post to the address 
“Commissioner General of Examinations, P.O Box 1503, Colombo

Click Below for Instructions



EB EXAM Results Released :   DEVELOPMENT OFFICERS' SERVICE - 2015 (II) 2019
Cabinet Decisions : 02 Sep 2020
September 03, 2020

Cabinet Decisions : 02 Sep 2020



Tamil Translation Also Available at the bottom.
தமிழ் மொழிபெயர்ப்பு இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது
Source : News.lk (Government News Portal)









2020.09.02 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்பின்வருமாறு:

01.முதலீட்டு மேம்பாடு தொடர்பில் அமைச்சரவை உப குழு ஒன்றை நியமித்தல்

சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் வறுமையை ஒழிப்பது அனைத்து தரப்பினர்களுக்கும் பலன்கள் கிடைக்கக் கூடிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான மாற்று உற்பத்தி பொருளாதாரத்திற்காக உள்ளுர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வசதிகளை விரிவுப்படுத்தலை அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. இதற்காக கொள்கை ரீதியிலும் நடைமுறையிலும் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையிலும்; கீழ் குறிப்பிட்ட அமைச்சரவை அங்கத்தவர்களைக் கொண்ட முதலீட்டு மேம்பாடு தொடர்பான அமைச்சரவை உப குழுவை நியமிப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்
பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்

 கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
கடற்றொழில் அமைச்சர்

 கௌரவ காமினி லொக்குகே அவர்கள்
போக்குவரத்து அமைச்சர்

 கௌரவ பந்துல குணவர்தன அவர்கள்
வர்த்தக அமைச்சர்

 கௌரவ டளஸ் அழகப்பெரும அவர்கள்
மின்சக்தி அமைச்சர்

 கௌரவ ஜோன்ஸ்;டன் பெர்னாண்டோ அவர்கள்
பெருந்தெருக்கள் அமைச்சர்

 கௌரவ விமல் வீரவன்ச அவர்கள்
கைத்தொழில் அமைச்சர்

 கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள்
சுற்றாடல் துறை அமைச்சர்

 கௌரவ எஸ்.எம்.சந்திரசேன அவர்கள்
காணி அமைச்சர்

 கௌரவ வாசுதேவ நாணயக்கார அவர்கள்
நீர் வழங்கல் அமைச்சர்

 கௌரவ உதய பிரபாத் கம்மன்பில அவர்கள்
எரிசக்தி அமைச்சர்

 கௌரவ ரமேஸ் பத்திரண அவர்கள்
பெருந்தோட்டத்துறை அமைச்சர்

 கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள்
சுற்றுலாத்துறை அமைச்சர்

 கௌரவ ரோஹித்த அபே குணவர்தன அவர்கள்
துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சர்

 கௌரவ அலி சப்ரி அவர்கள்
நீதி அமைச்சர்

இதே போன்று இந்த உப குழுவின் பணிகளுக்காக கீழ் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காகவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 கௌரவ துமிந்த திஸாநாயக்க அவர்கள்
சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

 கௌரவ ஜயந்த சமரவீர அவர்கள்
களஞ்சிய வசதிகள், கொல்களன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள் மற்றும் இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

 கௌரவ திலும் அமுனுகம அவர்கள்
வாகனங்களை ஒழுங்குப்படுத்தல், பேருந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

 கௌரவ டீ .வீ. சானக அவர்கள்
விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

 கௌரவ நாலக்க கொடஹேவா அவர்கள்
நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருட்கள் அகற்றுதல் மற்றும் சமுதாய துப்பரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

 கௌரவ அஜித் நிவாட் கப்ரால் அவர்கள்
நிதி மற்றும் மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி சீர்திருத்தம் இராஜாங்க அமைச்சர்

02. நடுத்தர வகுப்பின வருமான பயனாளிகளுக்கு அவர்களது வருமானத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய வீட்டை நிர்மாணிப்பதற்காக கடன் பத்திரங்கள் மூலம் மூலதனத்தைப் பெற்றுக்கொள்ளுதல்

அரச மற்றும் தனியார் துறையில் பணியில் ஈடுபட்டுள்ள நடுத்தர வகுப்பின வருமான பயனாளிகளின் சேவைக்காக அவர்களின் வருமானத்திற்கு ஈடு கொடுக்கக்கூடிய வீட்டை பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையில் வீடமைப்பு திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2020.05.27 ஆம் திகதி அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கு அமைவாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அடிப்படை மூலதனத்தைப் பெற்றுக் கொள்வதற்காக 5 வருட காலத்திற்கு செல்லுபடியான 25 பில்லியன் ரூபா கடன் பத்திரத்தை விடுவிப்பதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரை அமைச்சரவையினால்; அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதே போன்று திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் வீடுகளை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஊடாக கடன் பத்திரத்தை செலுத்துவதற்கும், இந்த வீட்டை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட கொள்வனவாளர்களுக்கு 25 தொடக்கம் 30 வருடகால எல்லைக்கான நிவாரண கடன் குறைந்த கடன் வட்டி அடிப்படையில் அரச வங்கிகள் மூலம் வீட்டு கடனை வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

03. 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தல் மற்றும் புதிய அரசியல் யாப்பு ஒன்றுக்கான திருத்த வரைபு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் யாப்பில் 2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 19 ஆவது திருத்தத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை மற்றும் குறைபாடுகளை களைவதற்காக குறுகிய கால நடவடிக்கை என்ற ரீதியில் 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்திற்கான திருத்த சட்ட மூலத்தை வகுப்பதற்காக சட்ட திருத்த வரைபிற்கு ஆலோசனை வழங்குவதற்கு 2020.08.19 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு அமைவாக சட்ட திருத்த வரைபு பிரிவினால் தயாரிக்கப்பட்ட திருத்த சட்ட மூலம் நீதி அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த திருத்த சட்ட மூலம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 13 ஆவது திருத்தம் மற்றும் அதற்கு ஏற்புடையதாகாதது என்பதுடன், அரசியல் யாப்பின் 82 (5) யாப்பிற்கு அமைவாக பாராளுமன்றத்தில் 3 இல் 2 இற்கு குறையாத வாக்களிப்புடன் நிறைவேற்றக் கூடிய நிலை இருப்பதாகவும் சட்டமா அதிபரினால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலைப்பாடு அமைச்சரவையினால் கவனத்திற் கொண்டு அந்த சட்ட திருத்த மூலத்தை அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடுவதற்கும், அதனைத் தொடர்ந்து அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2020.08.19 ஆம் திகதி அன்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்ட வகையில் நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரையை கவனத்திற் கொண்டு புதிய அரசியல் யாப்பு ஒன்றுக்கான அடிப்படை திருத்த சட்ட மூலத்தை தயாரிப்பதற்காக கீழ் குறிப்பிடப்பட்ட நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

 ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா அவர்கள் (தலைவர்)
 ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன அவர்கள்
 ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா அவர்கள்
 ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன அவர்கள்
 பேராசிரியர் திருமதி நசீமா ஹமூர்தீன் அவர்கள்
 கலாநிதி எ.சர்வேஸ்வரன் அவர்கள்
 ஜனாதிபதி சட்டத்தரணி சமன்த ரத்வத்தே அவர்கள்
 பேராசிரியர் வசன்த செனவிரத்ண அவர்கள்
 பேராசிரியல் ஜி.எல்.பீரீஸ் அவர்கள்

04. தேசிய வர்த்தக கொள்கை ஒன்றை தயாரிப்பது தொடர்பில் புத்திஜீவிகள் குழ ஒன்றை நியமித்தல்

அமைச்சரவையினால் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய வர்த்தக கொள்கையை வகுப்பதில் உரிய வகையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கேட்டறிந்து அதன் கொள்கை வகுக்கப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக தற்போதைய காலத்திற்கு பொருத்தமான வகையில் பதிய தேசிய வர்த்தக கொள்கை ஒன்றை வகுப்பதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புத்திஜீவிகள் குழு ஒன்றை நியமிப்பதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலைப்பின்னல் முதலான நிறுவனங்களுக்கான மீண்டெழும் செலவுக்காக (Recurring expense) திறைசேரியில் நிதியைப் பெற்றுக்கொள்ளுதல்.

கொவிட் 19 வைரஸ் தொற்று பரவியதைத் தொடர்ந்து இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலைப்பின்னல் ஆகியவற்றின் வருமானம் குறைவடைந்ததன் காரணமாக இந்த நிறுவனங்களின் சம்பளம் மற்றும் அத்தியாவசிய செலவுகளை சமாளிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் 2020 ஆம் ஆண்டில் செப்டெம்பர்; மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரையிலான 4 மாத காலத்திற்கு இந்த நிறுவனங்களின் அத்தியாவசிய Recurring expense  செலவுகளுக்கான நிதியை திறைசேரியில் பெற்றுக்கொள்வதற்காக வெகுஜன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக மூலோபாய திட்டத்தை தயாரித்து திறைசேரியின் உடன்பாட்டைப் பெற்று அந்த திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

06. பிரதேச தொழில் பேட்டைகளில் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக காணிகளை ஒதுக்கீடு செய்து வழங்குதல்.

பிரதேச மட்டத்தில் தொழிற்சாலைகளை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டு கைத்தொழில் அமைச்சரினால் ஷஷபிரதேச தொழில் பேட்டை அபிவிருத்தி வேலைத்திட்டம்' நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சம்பந்தப்பட்ட பிரதேச கைத்தொழில் துறை சேவை குழு ஒன்றினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை அடிப்படையாக கொண்டு இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இரத்மலானை, களுத்துறை, மில்லேவ, நாலன்த, உலப்பனை, மாகந்துர, ஊவா பரணகம மற்றும் மட்டக்களப்பு ஆகிய தொழில் பேட்டைகளில் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்காக 9 முதலீட்டாளர்களுக்கு 35 வருட காலத்திற்காக குத்தகை அடிப்படையில் காணிகளை ஒதுக்கீடு செய்து வழங்குவதற்கு கைத்தொழிற்துறை அமைச்சரினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. இலங்கையில் இயற்கை எரிவாயு தொடர்பான தேசிய கொள்கை

இலங்கையில் இயற்கை எரிவாயு தொடர்பான திருத்த சட்ட மூலத்தில் தேசிய கொள்கையை ஆராய்ந்து பார்த்து தேவையான திருத்தத்தை சமர்ப்பிப்பதற்காக புத்திஜீவிகளைக் கொண்ட குழு ஒன்றை நியமிப்பதற்கு 2020 பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு அமைவாக இந்த பணிகளுக்காக நியமிக்கப்பட்ட 17 அங்கத்தவர்களைக் கொண்ட புத்திஜீPவிகள் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் ஷஷ இயற்கை எரிவாயு கொள்கை' எரிசக்தி அமைச்சர் அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அது தொடர்பில் அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

08.புத்தளம் நிலக்கரி அனல் மின் நிலையத்திற்கு உடனடியாக கொள்வனவு செய்யும் நடவடிக்கையின் கீழ் தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்தல்.

புத்தளம் நிலக்கரி அனல் மின் நிலையத்திற்காக உடனடியாக கொள்வனவு செய்யும் நடவடிக்கையின் கீழ் 300,000 மெற்றிக் தொன் நிலக்கரியை பெற்றுக்கொள்வதற்கான பெறுகை, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விஷேட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய M/s Swiss Singapore Overseas Enterprises Pte. Ltd  என்ற நிறுவனத்திடம் 16.18 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக மின் சக்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. கொலன்னாவ கட்டட தொகுதியில் 3 எரிபொருள் களஞ்சிய தாங்கிகளை கொள்வனவு செய்தல் , நிர்மாணித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல்.

கொலன்னாவ எரிபொருள் களஞ்சிய கட்டட தொகுதிக்காக 3 எரிபொருள் களஞ்சிய தாங்கிகளை கொள்வனவு செய்தல் , நிர்மாணித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய Indo – East Engineering and Construction (Lanka) Pvt.Ltd  என்ற நிறுவனத்திடம் 942.47 மில்லியன் ரூபாவை (Vat வரி தவிர்த்து) வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

10. அரசாங்க நிறுவனங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள வாகனங்களை செப்பனிட்டு பயன்படுத்துதல் மற்றும் ஒதுக்குதல்.

உரிய வகையில் பராமரிக்கப்படாததன் காரணமாக தற்பொழுது பயன்படுத்தப்படாத பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் அரசாங்க நிறுவனங்களில் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதுடன் 2020 ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியளவில் செப்பனிட்டு பயன்படுத்தக்கூடிய 4,116 வாகனங்கள் மற்றும் ஒதுக்குவதற்கான 5,588 வாகனங்கள் இருப்பதாக அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக செப்பனிட்டு பயன்படுத்தக்கூடிய பயனுள்ள வாகனங்களை பழுது பார்ப்பதற்காக சம்பந்தப்பட்;ட நிறுவனங்களுக்கு தேவையான நிதி இல்லாத சந்தர்ப்பத்தில் தேசிய வரவு செலவு திணைக்களத்தினால் அதற்கான நிதியை வழங்குவதற்கும், அவ்வாறு செப்பனிடப்பட்ட வாகனங்களை, போதுமான வாகனங்களைக் கொண்டிராத அரச நிறுவனங்களுக்கு நிதி அமைச்சின் கீழ் உள்ள கணக்கு தணிக்கையாளர் நாயக அலுவலகத்தின் ஊடாக உரிய வகையில் வழங்குவதற்கும், செப்பனிட முடியாத வாகனங்களை ஏற்ற நடைமுறையைக் கடைப்பிடித்து ஒதுக்குவதற்கும் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02/09/2020

Exam Application : Once in 5 years for public servants who receive Government Language Promotion Allowance
September 02, 2020

Exam Application : Once in 5 years for public servants who receive Government Language Promotion Allowance

 

 



Exam Application

Once in 5 years for public servants who receive Government Language Promotion Allowance

භාෂා ප්‍රවර්ධන දීමනාව ලබා ගන්නා රජයේ සේවකයින් විසින් වසර 5 කට වරක් පෙනී සිටිය යුතු විභාගය

அரச கரும மொழி ஊக்குவிப்புக் கொடுப்பனவு பெறும் அரச ஊழியர்கள் 5 வருடத்துக்கு ஒரு முறை தோற்ற வேண்டிய பரீட்சை

Closing Date 13 . 11 . 2020

Click Below the Details and Application

Sinhala


Tamil


English


Click Below for the Circular (Regarding this Scheme)

Sinhala

Tamil


01/09/2020

Warning to the Public
September 01, 2020

Warning to the Public



Warning to the Public 
මහජනයාට අනතුරු ඇඟවීම​​ 
විදේශ රැකියා වංචා 
பொதுமக்களுக்கான எச்சரிக்கை 
 வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி 


31 Aug 2020

பொதுமக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கை தொடர்பில் பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யப்பட்ட நிலைமையில் இது எவ்வாறு நடைபெற்றது என பொலிஸாரினால் விளக்கப்பட்டது. guruwaraya.lk

ஐரோப்பிய மற்றும் கொரியா வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்களினூடு விளம்பரங்கள் வௌியிடப்பட்டு, விண்ணப்பங்களை அனுப்புவதற்கான முகவரி மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் என்பன வழங்கப்படுகின்றன.guruwaraya.lk

பின்னர் விண்ணப்ப படிவத்தின் ஊடாக  பெயர், முகவரி, வதிவிடம், பெற்றோரின் தகவல்கள், தேசிய அடையாள அட்டையின் பிரதி, கடவுச்சீட்டின் பிரதி போன்ற தகவல்களை சேகரித்துக் கொள்கின்றனர்.guruwaraya.lk

பின்னர் குறித்த தொழில்வாய்ப்புக்கு தகுதி பெற்றுள்ளீர்கள், போதுமான தகைமைகள் உண்டு எனக்கூறி, உங்கள் விண்ணப்பத்தை குறித்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும் , எனவே வங்கி சேமிப்பு உத்தரவாதம் தேவை. கணக்கொன்றினை உங்கள் பெயரில் ஆரம்பித்து குறைந்தது 2 மில்லியன் வைப்பிலிட்டு அக்கணக்கு தொடர்பான சான்றிதழினை அனுப்பி வைக்குமாறு வினவப்படுகின்றனர். guruwaraya.lk  சிலர் 5, 6 மில்லியன் வரை வைப்பிலிட்டு அது தொடர்பான ஆவணங்களை வழங்குகின்றனர்.

பின்னர் அவர்களின் மோசடி ஆரம்பமாகின்றது.  ஏற்கனவே பெறப்பட்ட தேசிய அடையாள அட்டையின் தகவலை வைத்துக்கொெண்டு, குறித்த நபர் பயன்படுத்திய தொலைபேசி காணாமல் போய்விட்டதாகக் கூறி, அதே இலக்கத்தில் புதிய சிம் இனை தொலைபேசி சேவை வழங்குநரிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றனர். guruwaraya.lk

பின்னர் அந்த நம்பரில் இருந்து வங்கியைத் தொடர்பு கொண்டு, தனது தொலைபேசி தொலைந்து விட்டதாகவும், தனது வங்கியில் இவ்வளவு பணம் இருப்பதாகவும், அதை அவசரமாக பெற வேண்டியுள்ளதாகவும் குறித்த பின் இலக்கத்தை தனது தொலைபேசிக்கு அனுப்புமாறும் வினவுகின்றனர்.guruwaraya.lk

பின்னர் வங்கி வினவும் இரகசிய உறுதிப்படுத்தல் தகவல்களை (பெற்றோரின் தகவல்கள், பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை போன்ற) குறித்த விண்ணப்பத்தில் இருந்து பெற்று பாடமாக்கி, விரைவாக வழங்குவதால், வங்கி சந்தேகமின்றி புதிய கடவுச்சொல்லினை வழங்க அவர்கள் பணத்தை அதனூடாக பெற்றுக் கொள்கின்றனர்.guruwaraya.lk

ஆரம்ப காலங்களில் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிட வைத்து மோசடி செய்தனர். தற்போது, குறித்த விண்ணப்பதாரிகளின் வங்கிக் கணக்கில் வைப்பில வைத்தே அவற்றை மோசடி செய்கின்றனர்.

எனவே இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகின்றனர்.

நன்றி Hiru TV
மொழிபெயர்ப்பு guruwaraya.lk


Popular

Recent

Ad

Learning Materials for Students